top of page

112 ஆண்டுகளின் பின் இலங்கையின் முதலாவது பெண் இறப்பர் ஏல விற்பனையாளர்

இலங்கையில் இறப்பர் ஏல விற்பனை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 112 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த துறையின் முதலாவது பெண் ஏல விற்பனையாளராக ஜோன் கீல்ஸ் பிஎல்சி நிறுவனத்தை சேர்ந்த மேகலா வணிகசூரிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

2012 செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற இறப்பர் ஏல விற்பனையின் போது முதல் தடவையாக ஒரு பெண் இறப்பர் ஏல விற்பனையில் ஈடுபட்டதாக ஜோன் கீல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இறப்பர் ஏல விற்பனை 1910ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருந்தன. ஆயினும், இந்த வர்த்தகத்துறையில் ஆண்கள் மட்டுமே இதுவரை ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தட்டச்சின்​ போது விசேட குறியீடுகளை உட்புகுத்து​வதற்கு

கணனித் தட்டச்சுக்களின் போது Keyboard-ல் தரப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவான எழுத்துக்களையும், இலக்கங்களையும், சில விசேட குறியீடுகளையும் மட்டுமே உட்புகுத்த முடியும்.

இவற்றினை விட மேலதிகமான எந்த குறியீடுகளையும் சாதாரணமாக Keyboard-னைப் பயன்படுத்தி உட்செலுத்த முடியாது.

எனினும் மின்னஞ்சல் அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் மேலதிகமாக சில குறியீடுகள் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படலாம்.

அவ்வாறு விசேட குறியீடுகளை பயன்படுத்தும் அவசியங்கள் ஏற்படும் தருணங்களில் Holdkey எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது.

இம்மென்பொருளினைப் பயன்படுத்தி é à ø ü € ß ñ ï ç ö ę ğ போன்ற மேலும் பல குறியீடுகளை உட்புகுத்த முடியும்.

Latest Projects

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் நேற்று தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் பங்களாதேஷ் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தை முற்றுகைப் போராட்டம் நடாத்தினர். இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கோனிடம் முறையிட்டுள்ளதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கையர்களின் உரிமையாகும். எனினும் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்கப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

பகுதி அளவில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு சில பாடங்களுக்கு மட்டும் விடைத்தாள் மதிப்பீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது, சகல பாடங்களுக்குமான விடைத்தாள் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கப் போவதில்லை: ஆசிரியர் சங்கம்

ஐ.நா.வின் உலக இளைஞர் மாநாடு; 2014இல் இலங்கையில் நடத்த பான் கி மூன் தீர்மானம்

2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கி மூன், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 67ஆவது பொதுச்சபை மாநாட்டின் போதே பான் கீ மூன்இவ்வாறு தெரிவித்துள்ளார்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைக்க 35 ஏக்கர் காணி ஒதுக்கீடு

கொழும்பு நகரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக 15 வௌ;வேறு இடங்களில் 35 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இடங்களிலுள்ள குடும்பங்கள் சகல வசதிகளும் கொண்ட அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த குடும்பங்கள் வசித்த இடங்கள், கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் அரை – அபிவிருத்தி செற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இலங்கை

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

முதலாவது அரையிறுதியில் இன்று இலங்கை எதிர் பாகிஸ்தான்

அம்பாறை மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச தேசிய நடமாடும் சேவை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அபேவர்த்தன, திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்,திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சுகிர்தராஜன், கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் ஜி.ரவிராஜன், மாகாண பதில் காணி ஆணையாளர் ரி.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் பிரதேச தேசிய நடமாடும் சேவை

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

பாகிஸ்தான் அணி 2009ஆம் ஆண்டு உலக டுவென்டி டுவென்டி தொடரில் சம்பியன்களான அதேவேளை, அத்தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராகப்
பங்குபற்றித் தோல்வியடைந்திருந்தது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயம்

கிளிநொச்சியில், மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உட்பட ஏழு மாணவர்கள் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றுள்ளது.

பாலமுனையில் ராட்சத சுறாக்கள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் 02 ராட்சத சுறாக்கள் நேற்று வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.

கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது.

இந்தச் சுறாக்கள் சுமார் 03 லட்சம் ரூபாவுக்கு விற்பனையாகியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சிடம் பங்களாதேஷ் அதிருப்தி

  • Wix Facebook page
  • Wix Twitter page
  • Wix Google+ page
  • Wix Facebook page
  • Wix Twitter page
  • Wix Google+ page
தமிழ் சஞ்சிகைகள்
ஆங்கிலச் செய்திகள்
விஞ்ஞானம்
தொழிநுட்பம்
தரவிறக்கம் செய்ய
கணணி விளையாட்டு
கிராமத்து தளங்கள்

About Us

​2012@Copyright

Palamunai Vasantham

E-mail\facebook

- palamunaiv@yahoo.com
- palamunai vasantham/facebook
- www.palamunaiv.tk

000,vasantham road,

palamunai.

From

2012©Copyright . All rights reserved.

bottom of page